×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மதுபோதையில் கொள்ளையடிக்க சென்ற திருடன்.! போதை தலைகேறியதால் மட்டை.! பரபரப்பு சம்பவம்.!

கொள்ளையடிக்க சென்ற வீட்டில் போதையில் விழுந்து கிடந்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

கோவை மாவட்டத்தை சேர்ந்த சேகர் என்பவர் சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் தங்கி சமையல் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் வழக்கம்போல் நேற்று சமையல் வேலைக்கு சென்றுவிட்டு மீண்டும் மாலை வீடு திரும்பினார். அப்போது, அவரது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்துள்ளது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சேகரின் மனைவி ஆனந்தி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அவர்களது பீரோ உடைக்கப்பட்ட நிலையில் மர்ம நபர் அதன் அருகே மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதனைப்பார்த்து பதறிப்போன ஆனந்தி அலறல் சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்துள்ளனர்.

சேகரின் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற கொள்ளையன், அளவுக்கு அதிகமான போதையில் விழுந்து கிடப்பது தெரிந்தது. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த நபரை தெளிய வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் பெயர் நாகராஜ் என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#arrest #drunken robbber
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story