தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தலைக்கேறிய மது போதை.. மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன்.!

தலைக்கேறிய மது போதை.. மனைவி தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவன்.!

Drunken husband killed wife in namakkal Advertisement

சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 39). கூலி தொழிலாளியான இவருக்கு ராதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராதா குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டு தனது குடும்பத்தினருடன், அம்மா ஊரான நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள நாமகிரிப்பேட்டை அருகே குடி பெயர்ந்துள்ளார்.

namakkal

இந்த நிலையில் கோவிந்தன் குடித்துவிட்டு ராதாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அதன்படி நேற்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த கோவிந்தன் ராதாவிடம் தகராறு செய்துள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் கோவிந்தன் அருகில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து ராதா தலையில் போட்டுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராதா கதறி துடித்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ராதாவை மீட்டு ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு ராதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த நாமகிரிப்பேட்டை போலீசார் ராதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கோவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#namakkal #Salem #Rasipuram #Drunken husband #Namagiripettai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story