×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தலைக்கேறிய மது போதை பெற்ற மகனையே கொலை செய்த தந்தை.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

தலைக்கேறிய மது போதை பெற்ற மகனையே கொலை செய்த தந்தை.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

Advertisement

கிருஷ்ணகிரி அருகே பெற்ற மகனையே தந்தை கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள கடுகானப்பள்ளி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சந்தோஷ். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இதனிடையே அவரது மனைவி கடந்த 2 ஆண்களுக்கு முன்பு உயிரிழந்தார்.

இந்த நிலையில் சந்தோஷ் தனது 6 வயது மகன் செந்தில் செல்வனுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார். இதில் மது பழக்கத்திற்கு அடிமையான சந்தோஷ் குடித்துவிட்டு வந்து தூங்கிக் கொண்டிருந்த தனது மகன் கழுத்தில் கால் வைத்து நசுக்கி கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக சூளகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சந்தோஷிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது மனைவியை நான் தான் கொன்று கிணற்றில் தள்ளி விட்டேன் என கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Krishnagiri #soolagiri #Crime #killed #death
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story