×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பாவி.. பெத்த புள்ளைன்னு கூட பார்க்கல.. தலைக்கேறிய போதையில் தந்தை செய்த கொடூரம்.. சுருண்டு விழுந்து உயிரிழந்த மகன்..

பெற்ற மகனை தந்தையே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள

Advertisement

பெற்ற மகனை தந்தையே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரை அடுத்துள்ள அடுக்கம்பாறை பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு திருமணம் முடிந்து இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.  இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், தற்போது இரவு நேரக் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் மது போதைக்கு அடிமையான இவர், மது குடித்துவிட்டு அடிக்கடி தனது குடும்பத்தினருடன் சண்டைபோடுவந்துள்ளார். வழக்கம்போல் நேற்று இரவும் மதுபோதையில் வீட்டிற்கு வந்த சுப்பிரமணி, மதுபோதையில் தனது மகளுடன் சண்டை போட்டுள்ளார்.

இதனை சுப்ரமணியன் இளைய மகன் வினோத் கண்டித்துள்ளார். இதனால் தந்தை மற்றும் மகன் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணி, தன்னிடம் இருந்த நீளமான இரட்டைக் குழல் துப்பாக்கியை எடுத்துவந்து மகன் வினோத்தை சுட்டுள்ளார்.

வலதுபக்க மார்பில் குண்டு துளைத்த நிலையில், சுருண்டு விழுந்த வினோத் சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து அங்கிருந்து தப்பித்து தலைமறைவானார் சுப்பிரமணி. இதனிடையே துப்பாக்கி சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வேலூர் தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இறந்து கிடந்த வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் தலைமறைவாக இருந்த குற்றவாளி சுப்ரமணியையும் போலீசார் இரவோடு இரவாக கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.

பெற்ற மகனையே தந்தை சுட்டு கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #Gun shot #Murder
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story