×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடிபோதையில் லாரியை ஓட்டி வந்த நபர்.! 2 கார்களை தட்டி தூக்கிய லாரி.! பரிதாபமாக உயிரிழந்த மொத்த குடும்பம்.!

திருப்பூரிலிருந்து பொள்ளாச்சி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை கதிரவன்

Advertisement

திருப்பூரிலிருந்து பொள்ளாச்சி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை கதிரவன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அந்த லாரி காமநாயக்கன்பாளையம் அருகே வரும்போது நிலைதடுமாறி எதிரே வந்த அடுத்தடுத்த இரண்டு கார்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு நடந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 காரில் பயணம் செய்த கார்த்திகேயன் அவரது மனைவி சரண்யா மற்றும் அவர்களது 7 வயது மகள் தனிகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மற்றொரு காரில் இருந்த 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரியை ஓட்டிவந்த கதிரவன் குடிபோதையில் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குடும்பத்துடன் வாகனத்தில் செல்பவர்கள் என்னதான் கவனமாக இருந்தாலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் செயலால், பயங்கர விபத்து ஏற்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது. இந்த வீணாப்போன மதுவினால் மது குடிப்பவர்களின் உயிர் மட்டும் போவது மட்டுமல்லாமல், அப்பாவி பொதுமக்களும் உயிரிழக்க நேரிடுகிறது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது அவர்களது குடும்பத்திற்கு மட்டும் ஆபத்தானது அல்ல. ஒட்டுமொத்த சமுதாயத்திற்குமே ஆபத்தானது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#accident #Lorry
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story