×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு.. கூலித் தொழிலாளி அடித்து கொலை.!

மதுபோதையில் ஏற்பட்ட தகராறு.. கூலித் தொழிலாளி அடித்து கொலை.!

Advertisement

ராணிப்பேட்டை அருகே மதுபோதையில் கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரும்பாக்கம் கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன். இவர் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் இவருக்கும், தனியார் கல்லூரியில்  மாஸ்டராக வேலை செய்யும் கமலக்கண்ணன் என்பவருக்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த வாய்த்தகராறு கைகளப்பாக மாறிய நிலையில் கமலக்கண்ணன், மகாதேவனை பிடித்து கீழே தள்ளியுள்ளார். அப்போது வீட்டின் படிக்கட்டில் தலை மோதி பலத்த காயமடைந்தார் இதனையடுத்து மகாதேவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மகாதேவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கமலக்கண்ணனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ranipet #Arumpakkam #Kulathu Street #Murder #Drunken boys
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story