×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மது போதையில் 11 ஆம் வகுப்பு மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்திய வாலிபர்கள்.!

மது போதையில் 11 ஆம் வகுப்பு மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்திய வாலிபர்கள்.!

Advertisement

தற்போது மது குடிப்பது சமூக அந்தஸ்து என நினைத்து பல இளைஞர்கள் மதுவினால் தங்களது வளர்ச்சி பாதையை இழந்து, எதிர்காலத்தை சீரழித்து கொண்டுள்ளனர். மதுவுக்கு எதிராக பலர் குரல் எழுப்பியும் தற்போதுவரை மதுவை ஒழிக்க முடியவில்லை. தற்போது மதுவினால் குற்றங்கள் பல அதிகரித்து வருகின்றன.

இந்தநிலையில், தர்மபுரி மாவட்டத்தில் மது போதையில் 11 ஆம் வகுப்பு மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள கோணம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். 22 வயது நிரம்பிய இவரது நண்பர்கள் மூர்த்தி, சேகர், சந்தோஷ், மனிகண்டன் ஆகியோர் நேற்று இரவு மது போதையில் வந்துள்ளனர்.

அப்போது அப்பகுதியில் தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்தி, ஆபாச வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தி என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Teenagers #police arrest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story