பள்ளி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த டிரைவர்.! தட்டி தூக்கிய போலீஸ்.!
பள்ளி மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த டிரைவர்.! தட்டி தூக்கிய போலீஸ்.!
சென்னை திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த மாதம் 10-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் தாம்பரம் பகுதியை சேர்ந்த டிரைவர் வெளி செய்துவரும் சஞ்சய் என்ற வாலிபர் அச்சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரது உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.
இந்தநிலையில், நேற்று சஞ்சய் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362