×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

12 ஆம் வகுப்பு மாணவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர்.! மாணவி எடுத்த விபரீத முடிவு.!

12 ஆம் வகுப்பு மனைவியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த டிரைவர்.! மாணவி எடுத்த விபரீத முடிவு.!

Advertisement

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி கடந்த 6-ஆம் தேதி காலை பெற்றோரிடம் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடப்பதாக கூறி சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சிறுமி வீடு திரும்பவில்லை.

இதனால் பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது சிறப்பு வகுப்பு எதுவும் நடைபெறவில்லை என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சிறுமி வெகுநேரம் கழித்து வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது திடுக்கிடும் அதிர்ச்சி தகவல் வெளியானது.

கோபி அருகே உள்ள புஞ்சைதுறைபாளையத்தை சேர்ந்த டிரைவர் பிரசாத் மணிகண்டன் என்ற வாலிபர் சிறுமியை பவானிசாகருக்கு அழைத்து சென்று ஒரு மறைவான இடத்தில் வைத்து சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் மனவேதனையடைந்த சிறுமி நேற்று முன்தினம் வீட்டில் மண்எண்ணெயை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனையடுத்து குடும்பத்தினர் சிறுமியை மீட்டு் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பிரசாத் மணிகண்டன் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதனியடத்து பிரசாத் மணிகண்டனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#school girl #abused #driver
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story