×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடி குடியை கெடுக்கும்.. குடிக்கு அடிமையான கணவரை போட்டு தள்ளிய மனைவி மற்றும் மகன் கைது.!

குடி குடியை கெடுக்கும்.. குடிக்கு அடிமையான கணவரை போட்டு தள்ளிய மனைவி மற்றும் மகன் கைது.!

Advertisement

உடுமலை அருகே மடத்துக்குளம் அடுத்த வேடப்பட்டி புதுகாலனியில் வசித்து வந்தவர்கள் தங்கவேல் - வஞ்சிக்கொடி தம்பதியினர். இவர்களுக்கு வாசுதேவன் என்ற மகன் ஒருவர் உள்ளார். இந்நிலையில் தங்கவேல் குடிக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் சம்பவத்தன்று குடித்துவிட்டு வந்த தங்கவேல் தனது மகன் வாசுதேவனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தகராறு முற்றவே ஆத்திரமடைந்த தங்கவேலின் மனைவி வஞ்சிக்கொடி மற்றும் மகன் வாசுதேவன் ஆகியோர் அங்கு இருந்த மண்வெட்டியால் தங்கவேலுவை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே அங்கு விரைந்து வந்த போலீசார் தங்கவேலின் மனைவி வஞ்சிக்கொடி மற்றும் மகன் வாசுதேவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #Aquest arrested #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story