×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"மே 31 வரை ரயில் மற்றும் விமான சேவை தமிழகத்திற்கு வேண்டாம்" பிரதமரிடம் முதல்வர் வேண்டுகோள்!

don't allow train and air service to tamilnadu until may 31

Advertisement

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வரும் மே 31 ஆம் தேதி வரை ரயில் மற்றும் விமான சேவை தமிழகத்திற்கு வேண்டாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

மூன்றாம் கட்டமாக நீடிக்கப்பட்டுள்ள ஊரடங்கானது வரும் மே 17 ஆம் தேதியுடன் முடிவிற்கு வருகிறது. அதற்க்கு அடுத்தது என்ன செய்யலாம் என்பது குறித்து இன்று பிரதமர் மோடி அணைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மே 31 ஆம் தேதி வரை ரயில் மற்றும் விமான சேவை தமிழகத்திற்கு வேண்டாம்" என கூறியுள்ளார். மே 12 ஆம் தேதி முதல் டெல்லியிலிருந்து நாட்டின் 15 முக்கிய நகரங்களுக்கு அனுப்புவதாக திட்டமிட்டுள்ளதில் சென்னையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Edapadi palanisamy #Tn Cm #meet with pm #Video conferencing #no train #no air service
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story