×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மரத்தை பார்த்து விடாமல் குரைத்துகொண்டே இருந்த நாய்!! அருகே சென்று பார்த்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி..

நாய் ஒன்று குரைச்சுக்கிட்டே இருந்தநிலையில் நல்ல பாம்பை கண்டறிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Advertisement

நாய் ஒன்று குரைச்சுக்கிட்டே இருந்தநிலையில் நல்ல பாம்பை கண்டறிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

புதுச்சேரி அருகேயுள்ள கண்டமங்கலம் சிவராந்தகம் பகுதியை சேர்ந்தவர் மனோகர். இவர் தனது வீட்டில் பலவகையான மரங்களை வளர்த்துவருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அவரது வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் ஒன்று அங்கிருந்த மாமரத்தை பார்த்து குரைத்துகொண்டே இருந்துள்ளது.

முதலில் இதனை கண்டுகொள்ளாத மனோகர், நாய் தொடர்ந்து குரைத்துகொண்டே இருப்பதை பார்த்து சந்தேகப்பட்டுள்ளார். உடனே நாய் இருக்கும் பகுதிக்கு சென்று பார்த்த அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த மாமரம் ஒன்றில் பெரிய நல்ல பாம்பு ஒன்று இருந்துள்ளது.

பாம்பை பார்த்து அதிர்ச்சியடைந்த மனோகர், உடனே இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viral News #snake
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story