மெரினா கடற்கரையில் மூழ்கி தற்கொலை செய்து கொண்ட பயிற்சி மருத்துவர்! சகோதரிக்கு அனுப்பிய வாட்ஸ்அப் மெசேஜ்!
Doctor suicide in merina
சென்னை மெரினா கடற்கரையில் உயிரிழந்த நிலையில் உடல் ஒன்று கரை ஒதுங்கி கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த உடலை மீட்டு
பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, அவரது மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் அந்த நபர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த மல்லிகா அர்ஜூன் என்பது தெரியவந்தது. பயிற்சி மருத்துவரான இவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த பயிற்சி மருத்துவர், தனது காரில் மெரினா கடற்கரைக்கு சென்று கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. அப்பா, அம்மாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளவும் என வாட்ஸ்அப் மூலம் தனது சகோதரிக்கு குறுஞ்செய்தி அனுப்பி யுள்ளார்.