#Breaking: 10 மணிநேர விசாரணை.. நாளை மீண்டும்? திமுக எம்.பி கதிர் ஆனந்த்..!
#Breaking: 10 மணிநேர விசாரணை.. நாளை மீண்டும்? விசாரணை தொடர்பாக திமுக எம்.பி கதிர் ஆனந்த்..!

திமுக பொதுச்செயலாளர் & அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இவர் கடந்த 2019 மற்றும் 2023 தேர்தலில் திமுக சார்பில் வேலூர் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக களமிறக்கப்பட்டு வெற்றி அடைந்தார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது கதிர் ஆனந்த் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டது. இந்த விஷயம் குறித்து வருமான வரித்துறை சோதனை & அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.
விளக்கம் அளிக்க உத்தரவு
சமீபத்தில் கதிர் ஆனந்த், அவரின் ஆதரவாளர்கள் வீடு மற்றும் கதிர் ஆனந்தின் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதன்பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள், இன்று எம்.பி கதிர் ஆனந்தை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: விஷம் கலந்த குளுக்கோஸை உடலில் ஏற்றி உயிரைவிட்ட மருத்துவர்; குடும்பத்தகராறில் விபரீதம்.!!
அதன்பேரில் இன்று காலை அவர் விசாரணைக்கு ஆராஜகினார். சமீபத்தில் நடந்த சோதனையில் ரூ.14 கோடி மதிப்பிலான ஆவணங்கள், ரூ.75 இலட்சம் ரொக்கம் ஆகியவை எம்.பி கதிர் ஆனந்த் மற்றும் அவரின் ஆதரவாளர்களின் வீடுகளில் இருந்து கைபடப்பட்டது.
10 மணிநேரம் விசாரணை
இந்நிலையில், திமுக எம்.பி கதிர் ஆனந்த், 10 மணிநேர விசாரணைக்கு பின்னர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கடந்த 2019ம் ஆண்டில் நடந்த தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு எம்.பி தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
நாளையும் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டால் வருவேன் என செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார். காலை சுமார் 10 மணிக்கு விசாரணைக்கு ஆஜரானவரிடம், இரவு சுமார் 8 மணிவரையில் என 10 மணிநேரம் விசாரணை நடைபெற்றுள்ளது.
இதையும் படிங்க: #JustIN: குழந்தையில்லாத ஏக்கம்; தம்பதி தற்கொலை.. வேலூரில் சோகம்.!