×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொடர்ந்து கொரோனாவுக்கு பாதிப்படையும் எம்எல்ஏக்கள்! மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏ-வுக்கு கொரோனா தொற்று உறுதி!

dmk mla affected by corona

Advertisement


கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,20,716-  ஆக உள்ளது.

இந்தநிலையில் பொதுமக்களுக்கு உதவி செய்யும் வகையில் ஆரம்பத்திலிருந்து அரசு, தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் ,என பல்வேறு தரப்பில் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். இந்தநிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா உறுதியாகி வந்தது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை அமைச்சர்கள் உள்பட 20 எம்.எல்.ஏக்களுக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், நாகர்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ சுரேஷ் ராஜனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #dmk mla
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story