×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்ன லுக்கு.? ... பெண்ணை முறைத்து பார்த்ததில் தகராறு... 2 பேருக்கு கத்தி குத்து,,, காவல்துறை விசாரணை.!

என்ன லுக்கு.? ... பெண்ணை முறைத்து பார்த்ததில் தகராறு... 2 பேருக்கு கத்தி குத்து,,, காவல்துறை விசாரணை.!

Advertisement

சென்னையில் பெண்ணை முறைத்து பார்த்ததால் ஏற்பட்ட தகராறில் இருவர் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் என்பவர் தனது மனைவியுடன் நங்கநல்லூரில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தி இருக்கிறார். அப்போது அங்கு வந்த  அருணாச்சலம் என்பவர் லோகேஸ்வரனின் மனைவியை முறைத்து பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் லோகேஸ்வரனுக்கும் அருணாச்சலத்துக்கும் இடையே தகராறு  ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இருவரும் தங்களது நண்பர்களை வரவழைத்து  ஆயுதங்களுடன் இரு தரப்பினரும்  பயங்கரமான சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதில் இரண்டு பேருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும்  மோதலில் ஈடுபட்ட இரண்டு பேரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #chennai #Crime #Two People Stabbed #Police Enquiry
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story