என்ன லுக்கு.? ... பெண்ணை முறைத்து பார்த்ததில் தகராறு... 2 பேருக்கு கத்தி குத்து,,, காவல்துறை விசாரணை.!
என்ன லுக்கு.? ... பெண்ணை முறைத்து பார்த்ததில் தகராறு... 2 பேருக்கு கத்தி குத்து,,, காவல்துறை விசாரணை.!
சென்னையில் பெண்ணை முறைத்து பார்த்ததால் ஏற்பட்ட தகராறில் இருவர் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த லோகேஸ்வரன் என்பவர் தனது மனைவியுடன் நங்கநல்லூரில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தி இருக்கிறார். அப்போது அங்கு வந்த அருணாச்சலம் என்பவர் லோகேஸ்வரனின் மனைவியை முறைத்து பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் லோகேஸ்வரனுக்கும் அருணாச்சலத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.