×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவன் மனைவி இடையே தகராறு.. தற்கொலை செய்து கொள்வது தான் ஒரே தீர்வு.. அவசரப்பட்ட தம்பதிகள்.. நிற்கதியான குழந்தைகள்..!

கணவன் மனைவி இடையே தகராறு.. தற்கொலை செய்து கொள்வது தான் ஒரே தீர்வு.. அவசரப்பட்ட தம்பதிகள்.. நிற்கதியான குழந்தைகள்..!

Advertisement

நாமக்கல் மாவட்டம் சிலுவம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் முருகேசன் - மதுமிதா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். முருகேசன் லாரி பட்டறை தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் தம்பதி இருவரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த கணவன் மனைவி இருவரும் தற்கொலை செய்து கொள்வதாக முடிவு எடுத்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

பின்னர் கணவன் மனைவி இருவரும் தூக்கில் தொங்கியவாறு இறந்து கிடப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவர்கள் இருவரது உடலையும் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Family Dispute #Sucide #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story