×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவியை கொலை செய்ய முயன்று, பரிதாபமாக உயிரைவிட கணவன்.. போதையில் மாறிய பாதை.!

மனைவியை கொலை செய்ய முயன்று, பரிதாபமாக உயிரைவிட கணவன்.. போதையில் மாறிய பாதை.!

Advertisement

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி, வடபருத்தியூர் பகுதியைச் சார்ந்தவர் நாட்டுத்துரை (வயது 70). மனைவி கருப்பாத்தாள் (வயது 65). தம்பதிகளுக்கு ஒரு மகள் இருக்கிறார். இவர் திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார். 

நாட்டுத்துரை தனது வீட்டில் ஆடுகள் வைத்து வளர்த்து வந்துள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர், எப்போதும் மதுபோதையிலேயே இருந்து வந்துள்ளார். 

இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், தனித்தனியாக உணவு சமைத்து சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மது போதையில் வீட்டிற்கு வந்த நாட்டுத்துரை, மனைவியிடம் தகராறு செய்துள்ளார். 

வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்து தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளார் சுதாரித்த கருப்பாத்தாள் அரிவாளை தனது கையில் வாங்கி கணவரை சரமாரியாக வெட்டி இருக்கிறார். இதில் சம்பவ இடத்திலேயே நாட்டுத்துரை பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவல் அறிந்து வந்த கீரனூர் காவல்துறையினர், விசாரணை நடத்தி கருப்பாத்தாளை கைது செய்து சிறையில் அடைத்தனர். நாட்டுத்துரையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dindigul #Murder #police #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story