நிலப்பிரச்சனையில் இப்படியா? தகர கொட்டகைக்குள் பாய்ந்த கார்? திமுக பெண் நிர்வாகி மீது புகார்.!
நிலப்பிரச்சனையில் இப்படியா? தகர கொட்டகைக்குள் பாய்ந்த கார்? திமுக பெண் நிர்வாகி மீது புகார்.!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர், அய்யலூர் பகுதியில் வசித்து வரும் நபர் சத்யா. இதே கிராமத்தில் வசித்து வருபவர் கிருஷ்ணன்.
சத்யா என்ற பெண்மணி, சர்ச்சைக்குரிய நிலம் ஒன்றில் குடிநீர் குழாய் அமைத்து இருக்கிறார். இதனை கிருஷ்ணன் தரப்பு பேரூராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் அகற்றி இருக்கிறது.
இதையும் படிங்க: திண்டுக்கல்: ஒரே மாதத்தில் 50 பேரிடம் ரூ.50 இலட்சம் மோசடி.. வீட்டில் வேலை, படுத்துக்கொண்டே சம்பாதிங்கள் என விளம்பரம்.!
இதுதொடர்பாக இரண்டு தரப்புக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், திமுக நிர்வாகி கிருஷ்ணனின் மகள், காரை ஓட்டி வந்து, சத்யா வசித்து வந்த தகரக்கொட்டாய் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இந்த விஷயம் குறித்து இருதரப்பும் நடுரோட்டில் வாக்குவாதம் செய்துகொண்டதும் நடந்துள்ளது. சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: திண்டுக்கல்: கட்டிட தொழிலாளிகள் இருவர் அடித்துக்கொலை;