×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆம்லேட்டுக்கு போரா?... ஹோட்டல் உரிமையாளர் மண்டையை பதம்பார்த்த குடிபோதை ஆசாமிகள்.!

ஆம்லேட்டுக்கு போரா?... ஹோட்டல் உரிமையாளர் மண்டையை பதம்பார்த்த குடிபோதை ஆசாமிகள்.!

Advertisement

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பேருந்துநிலைய வளாகத்தில் உணவகம் நடத்திவரும் நபர் சுப்பிரமணி. நேற்று வழக்கம்போல இவர் தனது உணவகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் அங்குவந்த 3பேர் பேசிக்கொண்டே  உணவருந்தியுள்ளனர். 

அவர்கள் ஆம்லெட் கேட்ட நிலையில் முட்டை காலியாகிவிட்டதால் ஆம்லெட் இல்லை என்று சுப்பிரமணி கூறியுள்ளார். இதனால் எனக்கு ஆம்லெட் தர முடியாதா? என வாக்குவாதம் ஆரம்பித்து குடிபோதையில் இருந்த மூன்று நபர்களும் கடையில் இருந்த பொருட்களை எடுத்து வீசி தகராறு செய்தனர். 

மேலும் உரிமையாளர் சுப்பிரமணியையும், அவரது மகன் தினேஷையும் தாக்கி இருக்கின்றனர். இதனை கண்ட மனைவி லட்சுமி மகனை காப்பாற்ற போராடும் நிகழ்வு அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் அசோக், சீனிவாசன், நவீன் ஆகிய மூன்று பேரை கைது செய்திருக்கின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dindigul #tamilnadu #palani
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story