×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குடிக்க பணம் கேட்டு தந்தையிடம் தகராறு: கடப்பாரையால் ஜென்ம விமோட்சனம் கொடுத்த சம்பவம்.!

குடிக்க பணம் கேட்டு தந்தையிடம் தகராறு: கடப்பாரையால் ஜென்ம விமோட்சனம் கொடுத்த சம்பவம்.!

Advertisement

 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தடங்கம் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தசாமி. இவரின் மனைவி திருப்பதி. தம்பதிகளுக்கு ஜெயவேல் என்ற மகன் இருக்கிறார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஜெயவேலின் மதுப்பழக்கம் காரணமாக அவரின் மனைவி பிரிந்து சென்றுவிடவே, 5 ஆண்டுகளாக ஜெயவேல் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கட்டிட வேலைக்கு அவ்வப்போது சென்று வந்துள்ளார். 

ஒருகட்டத்தில் குடித்துக்கொண்டு ஊதாரியாய் திரிந்த ஜெயவேல், தினமும் தனது பெற்றோரிடம் குடிக்க பணம் கேட்டு சண்டையிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று விவசாய நிலத்தில் வேலைபார்த்துக்கொண்டு இருந்த பெற்றோரிடம் ஜெயவேல் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். 

பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்திடுவேன் என்றும் மிரட்டவே, ஆத்திரமடைந்த தந்தை கோவிந்தசாமி கடப்பாரையால் ஜெயவேலை தாக்கி இருக்கிறார்.

படுகாயமடைந்த ஜெயவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். உடனடியாக மருமகன் சக்திவேலுக்கு கோவிந்தசாமி தகவல் தெரிவிக்க, அவர் ஊராருக்கு தகவல் சொல்லாமல் தோட்டத்தில் உடலை எரித்துவிடலாம் என முடிவெடுத்துள்ளனர். இதற்கான ஆயத்த பொங்கல் நடந்துள்ளன. 

தனது மகனின் மறைவால் நிலைகுலைந்து வாடிப்போன தாய் திருப்பதி, கூச்சலிட்டதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் டக்வல் அறிந்து காவல் துறையினருக்கு தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ஜெயவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கோவிந்தசாமி மற்றும் சக்திவேலின் மீது வழக்குப்பதிந்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dharmapuri #tamilnadu #Crime #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story