×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எந்த நேரமும் கேலி, கிண்டல்; சிறுமியை கலாய்த்த மாணவனை அடித்து நொறுக்கிய உறவினர்கள்.. பள்ளி வளாகத்தில் பகீர்.!

எந்த நேரமும் கேலி, கிண்டல்; சிறுமியை கலாய்த்த மாணவனை அடித்து நொறுக்கிய உறவினர்கள்.. பள்ளி வளாகத்தில் பகீர்.!

Advertisement

 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல், ஊட்டமலை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வரும் 15 வயது சிறுவன், தன்னுடன் பயின்று வந்த சக மாணவியை எப்போதும் கிண்டலடித்து, கேலி செய்து வந்துள்ளார். 

நெடுங்காலம் இதனை பொறுத்து வந்த சிறுமி, ஒரு சமயத்திற்கு மேல் மனதளவில் வைத்து புழுங்கி பெற்றோரிடம் கூறி இருக்கிறார். இதனைக்கேட்டு ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக பள்ளிக்கு வந்து தலைமை ஆசிரியர் பாலாஜியிடம் புகார் தெரிவித்துள்ளனர். 

தலைமை ஆசிரியர் பாலாஜி மற்றும் துணை தலைமை ஆசிரியர் நஞ்சப்பன், ஆசிரியர் வேல்முருகன் மாணவரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். இச்சமயத்திலேயே சம்பந்தப்பட்ட மாணவனிடம் வாக்குவாதம் செய்த மாணவியின் உறவினர்கள், ஒருகட்டத்தில் ஆவேசமாக தாக்கி இருக்கின்றனர். 

இந்த சம்பவத்தில் காயமடைந்த மாணவர் பொன்னகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியரிடம் புகாரும் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்ற அதிகாரிகள் மாணவர் மீது தாக்குதல் நடத்திய தங்கவேல் என்பவரை கைது செய்தனர். 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dharmapuri #Hogenakkal #Govt school #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story