5 கார்கள் மீது லாரி அடுத்தடுத்து மோதி கோர விபத்து.. தொப்பூர் கணவாயில் நடந்த பயங்கரம்.. 10 பேருக்கு சோகம்.!
5 கார்கள் மீது லாரி அடுத்தடுத்து மோதி கோர விபத்து.. தொப்பூர் கணவாயில் நடந்த பயங்கரம்.. 10 பேருக்கு சோகம்.!
தொப்பூர் கணவாய் பகுதியில் லாரி அடுத்தடுத்த 5 கார்களின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில், 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் பகுதி உள்ளது. அதிக வளைவுகள் மற்றும் ஏற்றங்களை கொண்ட கணவாய் பகுதியாக இவை அமைந்துள்ளதால், இப்பகுதியில் அவ்வப்போது கோர விபத்துகள் நிகழ்வதுண்டு. இந்த நிலையில், தொப்பூர் கணவாய் பகுதியில் 6 கார் மீது லாரி மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஓசூரில் இருந்து சேலம் நோக்கி பயணம் செய்த 6 கார், ஒரு லாரி காலை 08:30 மணியளவில் தொப்பூர் கணவாயில் சென்றுகொண்டு இருந்தது. அப்போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, கார்களின் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அடுத்தடுத்து 6 கார்களில் லாரி மோதியுள்ளது.
இதில், லாரிக்கு அருகே இருந்த காரில் பயணம் செய்தவர்கள் உட்பட 10 பேர் காயம் அடைந்தனர். 5 வாகனமும் சேதமடைந்தது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் காவல் துறையினர், காயமடைந்தோரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தலைமறைவான லாரி ஓட்டுனருக்கு வலைவீசப்பட்டுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362