×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஏழ்மையின் தாண்டவம்.. கனவு கலைந்து போனதால் +2 மாணவர் எடுத்த விபரீத முடிவு.. துடிதுடித்த பெற்றோர்.!

ஏழ்மையின் தாண்டவம்.. கனவு கலைந்து போனதால் +2 மாணவர் எடுத்த விபரீத முடிவு.. துடிதுடித்த பெற்றோர்.!

Advertisement

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு சரோஜினிபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் அந்தோணி - சந்தன பிரபா தம்பதியினர். இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மைக்கேல் ஜெரோம் என்ற மகன் ஒருவர் உள்ளார்.

இந்நிலையில் 12ம் வகுப்பு படித்து வரும் மைக்கேல் ஜெரோனுக்கு சிங்கப்பூர் சென்று வேலைக்கு சேர வேண்டும் என்பதை தனது நீண்ட நாள் கனவாக கொண்டுள்ளார். அதற்காக ஒரு கோர்ஸில் சேர வேண்டும் என்று பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால் வறுமையின் பிடியில் இருந்த பெற்றோர் அதற்கெல்லாம் அதிகம் செலவாகும் என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்து போன மைக்கேல் ஜெரோன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மாணவன் மைக்கேல் ஜெரோனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#+2 student #Attempt sucide #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story