×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி இளம்பெண்ணை அடித்து துன்புறுத்திய பல் மருத்துவர்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி இளம்பெண்ணை அடித்து துன்புறுத்திய பல் மருத்துவர்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!

Advertisement

சென்னையில் பல் மருத்துவமனை நடத்தி வருபவர் நிஷாந்த். மருத்துவரான நிஷாந்த் மீது பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆன எனக்கு, பல் மருத்துவரான நிஷாந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நிஷாந்த் தனக்கும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டதாகவும், என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறினார்.

இதனால் அவரோடு நான் நெருங்கி பழகி நாங்கள் இருவரும் கணவன்-மனைவி போலவே வாழ்ந்துவந்தோம். இந்த விஷயம் நிஷாந்தின் தாயாருக்கும் தெரியும். நாங்கள் இருவரும் பல்வேறு இடங்களில் நடந்த விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாக சென்று வந்தோம். அவர் கேட்கும்போது எல்லாம் அவருக்கு தேவையான பணத்தை கொடுத்து வந்தேன்.

இந்தநிலையில் போதையில் நிஷாந்த், என்னை அவரது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தினார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால் நிஷாந்த் என்னை அடித்து உதைத்து துன்புறுத்தியதுடன், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார் என புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஏற்கனவே நிஷாந்த் இதுபோன்று கணவனால் கைவிடப்பட்ட நான்கு பெண்களிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து பல் மருத்துவர் நிஷாந்த், அவரது நண்பர்களான ஷெரின், ஹர்த்திக் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Dentist #arrested
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story