×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உங்களுக்கு பாடை தயார்... முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு கொலை மிரட்டல்.! தட்டி தூக்கிய போலீஸ்.!

உங்களுக்கு பாடை தயார்... முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு கொலை மிரட்டல்.! தட்டி தூக்கிய போலீஸ்.!

Advertisement

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு போனில் மிரட்டல் விடுத்ததாக ஓபிஎஸ் ஆதரவாளர் சரவண பாண்டியன் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மகேந்திரவாடியை சேர்ந்தவர் சரவணபாண்டியன். 37 வயது நிரம்பிய இவர் கூட்டுறவு சங்கத்தில் தலைவராக உள்ளார். சம்பவத்தன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு புலித்தேவன் பிறந்தநாள் விழாவுக்காக தென்காசி மாவட்டம் நெற்கட்டும் செவ்வலுக்கு எப்போது வருவீர்கள்.

ஓபிஎஸ் தலைமையேற்றால் தற்கொலை செய்து கொள்வேன் என கூறியுள்ளீர்கள். எங்கள் ஊருக்கு வரும் உங்களுக்கு பாடை தயாராக இருக்கிறது என சரவணபாண்டியன் கூறியுயுள்ளார். போனில் மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து கொக்குகுளம் அதிமுக நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு செல்போனில் கொலை மிரட்டல் விடுத்த சரவண பாண்டியனை போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#death threat #rp udayakumar
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story