சுஜித்தின் தற்போதைய நிலை என்ன? மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல்! திக் திக் நிமிடங்கள்.
Current status of sujith
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டுவயது குழந்தை சுஜித் மூன்று நாட்களாகியும் தற்போதுவரை மீட்கப்படாதது அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சுஜித் சுய நினைவை இழந்திருப்பதாக மருத்துவர்கள் கூறியிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து திருச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவர் கூறுகையில் குழந்தை உயிரோடு இருப்பதை நாங்கள் உறுதி செய்துள்ளோம், குழந்தையின் உடல் வெட்பநிலையை வைத்து குழந்தை உயிருடன் இருப்பது உறுதியாகியுள்ளது. 75 மணி நேரத்தை கடந்தாலும் கூட கூடிய விரைவில் குழந்தையை மீட்டுவிட்டால் நிச்சயம் சுஜித்தை காப்பாற்ற முடியும்.
குழந்தையை காப்பாற்ற அணைத்து வசதிகளும் கொண்ட 5 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது, விரைவில் குழந்தையை ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே எடுத்துவிட்டால் குழந்தையை மீட்க அதிக வாய்ப்புள்ளதாக அவர் கூறியிருப்பது அனைவர்க்கும் சற்று ஆறுதலை கொடுத்துள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362