×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முன்னால் சென்ற லாரி பிரேக் அடித்ததால் பரிதாபம்; காரில் பயணித்த பெண் துடிதுடித்து பலி.!!

முன்னால் சென்ற லாரி பிரேக் அடித்ததால் பரிதாபம்; காரில் பயணித்த பெண் துடிதுடித்து பலி.!!

Advertisement

 

கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை, சிதம்பரம் முத்தையா நகர், வள்ளலார் தெரு பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேஷ். இவரின் மனைவி ரமா (வயது 40). 

இவர் நேற்று முன் தினம் கடலூரில் இருந்து சிதம்பரத்திற்கு காரில் புறப்பட்டு சென்றுள்ளார். பரங்கிப்பேட்டை அருகே உள்ள பி.முட்லூர் பகுதியில் சென்றபோது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் ஓட்டுனர் திடீரென பிரேக் அடித்துள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத ரமாவின் கார், லாரியின் பின்புறம் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ரமா பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கிள்ளை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#கடலூர் #tamilnadu #women died #Accident news #தமிழ்நாடு
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story