×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பீஸ் கெட்டுனா டேபிள் ல உட்காரலாம்.. இல்லனா தரைதான் - கடலூரில் தனியார் பள்ளி அடாவடி செயல்.!

பீஸ் கெட்டுனா டேபிள் ல உட்காரலாம்.. இல்லனா தரைதான் - கடலூரில் தனியார் பள்ளி அடாவடி செயல்.!

Advertisement

கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவ - மாணவிகளை தனித்தனியே பிரித்து தரையில் அமரவைத்த நிர்வாகத்தின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி, மேலப்பாளையம் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். 

இந்நிலையில், கொரோனாவால் மூடப்பட்ட பள்ளிகளில் தற்போது நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில், கல்விக்கட்டணம் செலுத்தாத மாணவ - மாணவிகளை பள்ளி நிர்வாகம் வளாகத்திற்குள் வெளியே தனியாக அமரவைத்துள்ளது. 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து பள்ளிகு சென்றவர்கள் சம்பவத்தை வீடியோ பதிவு செய்து, ஆசிரியரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அவர் நிர்வாகத்தை கைகாண்பித்து சென்றுவிட, இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Cuddalore #Panruti #school #Fees #parents #children
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story