கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருக்க சென்றவர் கைலாயம் பயணம்.. போதையில் நடந்த கூத்தால் பரிதாபம்.!
கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருக்க சென்றவர் கைலாயம் பயணம்.. போதையில் நடந்த கூத்தால் பரிதாபம்.!
தனது கள்ளகாதலியின் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருக்க முயன்றவர், பெண்ணின் மறுப்பால் சண்டையிட்ட நிலையில், எதிர்பாராத விதமாக கள்ளக்காதலி தள்ளிவிட்டு கீழே விழுந்து உயிரிழந்தார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம், சேத்தியாத்தோப்பு வளையமாதேவி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 45). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக வேல்முருகன் கரவெட்டி பள்ளி வளாகத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு காவல் துறையினர், வேல்முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனையின் முடிவில் வேல்முருகன் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதியாகவே, வழக்கு விசாரணையை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். விசாரணையில், கரவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரின் மனைவி மகாலட்சுமி (வயது 40). மகாலட்சுமிக்கும் - வேல்முருகனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னாளில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் கள்ளக்காதல் ஜோடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று கள்ளகாதலி மகாலட்சுமியின் வீட்டிற்கு சென்ற வேல்முருகன், மகாலட்சுமியை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளளார். வேல்முருகன் போதையில் உல்லாசமாக இருக்க வந்த காரணத்தால், மகாலட்சுமி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் எதற்ச்சையாக மகாலட்சுமி வேல்முருகனை கீழே தள்ளி இருக்கிறார். ஏற்கனவே போதையில் இருந்த வேல்முருகன், கீழே விழுந்தபோது தலையில் அடிபட்டுள்ளது.
இதனால் சம்பவ இடத்திலேயே வேல்முருகன் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இதனால் பயந்துபோன மகாலட்சுமி, விஷயம் வெளியே தெரியாமல் இருக்க வேல்முருகனின் நண்பர் இராமச்சந்திரனிடம் பணத்தை கொடுத்து, இருவரும் சேர்ந்து உடலை பள்ளி வளாகத்திற்குள் வீசியுள்ளனர். எதுவும் தெரியாதது போல் இருவரும் இருந்து வந்த நிலையில், விசாரணையின் போது மாட்டிக்கொண்டுள்ளனர். வேல்முருகனை கொலை செய்ததாக அவரின் கள்ளக்காதலி மகாலட்சுமி மற்றும் கொலையை மறைக்க உடந்தையாக இருந்த இராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
Note: Title Images Are Mahalatsumi and Ramachandran
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362