×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக சென்ற நபருக்கு நேர்ந்த கொடூரம்!

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராக சென்ற நபருக்கு நேர்ந்த கொடூரம்!

Advertisement

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கருப்பம்புலம் பகுதியை சேர்ந்தவர் சிவாஜி. கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இவர் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக நேற்று காலை தனது இருசக்கர வாகனத்தில் கொண்டிருந்தார்.

அப்போது தேத்தாகுடி வடக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, இவரை பின்தொடர்ந்து காரில் வந்த மர்ம கும்பல், சிவாஜியின் இரு சக்கர வாகனத்தை வழிமறித்து பட்டாகத்தியால் சரமரியாக வெட்டிவிட்டு காரில் தப்பி சென்றுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த சிவாஜி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் சிவாஜியின் உடலை கைப்பாற்றி பிரேத பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகள் 6 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Nagapattinam #Murder #killed #Crime #court
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story