×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் மேலும் ஒருவர் பலி! கொரோனோவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

Corono affected people increased in tamilnadu

Advertisement

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது பல உலகநாடுகளிலும் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த கொடூர கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவிய நிலையில் தற்போது 4400பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 124 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவும் நிலையில் அதனை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகளும் கடுமையான  நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது. 

மேலும் தமிழகத்தில் இன்று ஒருநாள் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு,  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று மேலும் ஒருவர் கொரோனோவால்  உயிரிழந்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த  64 வயது பெண்  பலியாகியுள்ளார்.  இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coronovirus #dead #tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story