×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் இன்று 4, 496 பேருக்கு கொரோனா உறுதி! ஒரே நாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இவ்வளவா?

Corono affected people counts in tamilnadu

Advertisement

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் பலியானவர்களின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் இன்று புதிதாக 4, 496 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த  நிலையில் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது. இதில்  அதிகபட்சமாக ஒரேநாளில்  சென்னையில் 1,291 பேருக்கு, மதுரையில் 341 பேருக்கு, திருவள்ளூரில் 278 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரனோ பாதிப்பால் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,167ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 5,000 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த நிலையில், மொத்தமாக கொரோனாவிலிருந்து  மீண்டு வீடு திரும்பியவர்களின்  எண்ணிக்கை 1,02,310 ஆக உயர்ந்துள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corono #tamilnadu #Counts
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story