கண்கலங்க வைக்கும் கொரோனா இறப்பு எண்ணிக்கை..! தமிழகத்தில் 6 ஆயிரத்தை கடந்த கொரோனா மரணம்.!
Corona Update Latest report of Chennai and Tamil Nadu
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,709 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து அன்றாடநிலவரம் , பாதிப்பு எண்ணிக்கை, தடுப்பு நடைமுறைகள் குறித்து தமிழக சுகாதாரத்துறை அறிக்கைவெளியிட்டுவருகிறது. அந்த வகையில் இன்று வெளியான அறிக்கையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிததாக 5,709 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,49,654 அதிகரித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் மட்டும் 121 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,007 ஆக அதிகரித்துள்ளது.
சற்று ஆறுதலாக இன்று மட்டும் 5,850 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,89,787 ஆக அதிகரித்துள்ளது.