தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கொரோனா அச்சுறுத்தல்: தஞ்சாவூரில் வீட்டில் தனிமைப்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை 5,000ஐ நெருங்குகிறது!

Corona safty

Corona safty Advertisement

சீனாவில் தொடங்கிய கொரோனோ இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக அளவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் பெரும் அச்சுறுத்தலில் உள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தலால் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தபட்டு வீட்டிற்குள்ளே முடங்கியுள்ளனர் மக்கள். கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுதைத் தடுக்கும் முயற்சியில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் தனிமைப்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை நெருங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

corona

வெளி நாடுகளிலிருந்து தமிழகம் வருபவர்கள் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டிருந்தாலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 28 நாள்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர். மேலும் அவர்கள் வீட்டிலும், வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் கைகளிலும் கொரோனா சீல் வைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில்  தனிமைப்படுத்தப்படும் நபர்களின் எண்ணிக்கை 4,961 ஆக உயர்ந்துள்ளது. 
அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களை, சுகாதாரம், உள்ளாட்சி, வருவாய், காவல் உள்ளிட்ட துறை அலுவலர்கள் தொடர் கண்காணிப்பும் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #virus
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story