கொரோனா எதிர்ப்பு கிரில், கொரோனா எதிர்ப்பு ஆம்லெட்.! கொரோனாவை எதிர்த்து ஹோட்டலில் அதிரடி ஆப்பர்!
corona offer in hottel
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. உயிரை பறிக்கக்கூடிய இந்த கொடிய வைரசால் உலக நாடுகளில் இதுவரை 6500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவை பொருத்தவரை 110 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தநிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த நாட்டை சேர்ந்த சுகாதாரத்துறையினர் இரவு பகல் பாராமல் கடுமையாக பணியாற்றிவருகின்றனர்.
கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்காக சுகாதாரத்துறை பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொதுமக்களிடையே வதந்தியை பரப்பி பீதியை கிளப்பி மக்களை அச்சப்படுத்தவேண்டாம் என தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் மதுரையில் ஹோட்டல் ஒன்றில் கொரோனா ஆப்பராக வித்தியாசமான நோட்டிஸ் ஒன்றை அடித்து பகிர்ந்து வருகின்றனர், அந்த போஸ்டரில் "கொரோனாஎதிர்ப்பு கிரில்", "கொரோனா எதிர்ப்பு ஆம்லெட்" என கூறி அதனுடன் இலவசமாக மூலிகை ரசம் கிடைக்கும் உணவும் கூறியுள்ளனர். அவர்கள் அந்த ஓட்டலில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக கிரில், ஆம்லெட் உள்ளிட்ட உணவுகளில் எதிர்ப்பு சக்தி கொண்ட இஞ்சி, மிளகு, மஞ்சள் அதிகப்படியாக சேர்பதையே கொரோனா எதிர்ப்பு உணவு என கூறி வியாபாரம் செய்கின்றனர். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362