×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தெரியுமா?? தமிழகத்தில் மே 10 முதல் 24 வரை முழு ஊரடங்கு அறிவிப்பு!! எதற்கெல்லாம் அனுமதி?? முழு விவரம் இதோ

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா காரணமாக தமிழகத்தில் மே 10 -ஆம் தேதி முதல் 24

Advertisement

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா காரணமாக தமிழகத்தில் மே 10 -ஆம் தேதி முதல் 24 -ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மே 10 -ஆம் தேதி காலை 4 மணிக்கு தொடங்கும் இந்த ஊரடங்கு மே மாதம் 24 -ஆம் தேதி காலை 4 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் எவை எவை இயங்கும், எவற்றிற்கெல்லாம் தடை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

* பால், பத்திரிகை, தனியார் விரைவுத் தபால் சேவை மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் இயங்க எந்த தடையும் இல்லை.

* விவசாய விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், ஆக்சிஜன் வாயு எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின்போது அனுமதிக்கப்படும்.

* மாட்டுத்தீவனம், வேளாண் உற்பத்திக்கு தேவையான பூச்சிக்கொல்லி, உரம், விதை விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

* சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது, உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். அம்மா உணவகங்கள் தொடர எந்த தடையும் இல்லை.
 
* Swiggy, Zomato போன்ற நிறுவனங்கள் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

* காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும்.

* ரேஷன் கடைகள் காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை செயல்படும், நடைபெற்றுவரும் கட்டடப் பணிகள் அனுமதிக்கப்படும். ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம்.

* திருமணம்  மற்றும் அதனை சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். இறுதி சடங்கில் 20 நபர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

* முழு ஊரடங்கு காலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

* வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவன சேவைகள் அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #lockdown
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story