×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இன்றும் குறையாத கொரோனா இறப்பு எண்ணிக்கை.! புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. 120 பேர் பலி..

Corona latest updates in Tamil Nadu and Chennai

Advertisement

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து அன்றாட நிலவரம், பாதிப்பு எண்ணிக்கை குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுவருகிறது. அந்த வகையில் இன்று வெளியான தகவலின்படி இன்று மட்டும் தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  3,43,945 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று மட்டும் 1,185 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியான தகவலின்படி 120 பேர் (அரசு மருத்துவமனை - 84, தனியார் மருத்துவமனை - 36) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனால் தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த பலி எண்ணிக்கை 5,886 ஆக உயர்ந்துள்ளது.

சற்று ஆறுதலாக தமிழகம் முழுவதும் இன்று மட்டும் 5,667 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,83,937 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 54,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #tamil nadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story