தமிழகத்தில் இன்று மேலும் 4,526 பேருக்கு கொரோனா! சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு?
corona increased in tamilnadu
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது.
தமிழகத்தில் இன்று புதிதாக 4,526 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,47,324 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,078 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இன்றைய அறிவிப்பில் மேலும் 67 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 2,099 ஆக உயர்ந்துள்ளது. மகிழ்ச்சியளிக்கும் விதமாக தமிழகத்தில் இன்று 4,743 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழக அரசு கொரோனவை கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362