×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு! ஒரே நாளில் 68 பேர் பலி!

corona increased in tamilnadu

Advertisement

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 
 
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், பாதிப்பு எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை இல்லாத வகையில், தொடர்ந்து 3வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,500க்கு கூடுதலாக சென்றுள்ளது. 

இதேபோன்று, தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்தனர்.  இதனால், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 1,025 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஒரே நாளில் சென்னையில் 1,939 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் கொரோனா தொற்று 51,699 ஆக உயர்ந்துள்ளது.  சென்னையில் மட்டும் இதுவரை 776 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona increased #tamilnadu
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story