தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சம்.! நேற்று ஒரு நாள் மட்டும் கொரோனா பாதிப்பு எவ்வளவு தெரியுமா..?
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் இரண்டாவது அலையாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சட
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் இரண்டாவது அலையாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு கொரோனா பரவ தீவிரமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமெடுத்துவருவதால் மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் இரண்டாவது அலையில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய உச்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,51,487 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 78 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,395 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 3,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 37 பேர் உயிரிழந்துள்ளனர் தமிழகத்தில் தற்போது 95,048 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362