தமிழகத்தில் ஒரு லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு! இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!
corona increased in tamilnadu
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோளை விடுத்து வருகிறது. மேலும், கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்ச அளவாக 4,329 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1,02,721 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,321ல் இருந்து 1,385 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 2,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.