×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா வைரஸ்! இன்று புதிதாக 4,231 பேருக்கு கொரோனா தொற்று!

corona increased in tamilnadu

Advertisement

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும்,கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று புதிதாக 4,231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று 65 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,765 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 1,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,728 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக 4 ஆயிரத்திற்கும் குறைவாக பாதிப்பு பதிவாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் தலைதூக்கி 4 ஆயிரத்தை  தாண்டி அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆனாலும் மகிழ்ச்சியளிக்கும் வகையில், இன்று 3,994 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 78,161 பேர் குணமடைந்துள்ளனர்.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #increased #tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story