×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்க வாய்ப்பு.! வெளியான ஷாக் தகவல்.!

இந்தியா முழுவதும் கொரோனா  பரவலின் இரண்டாவது அலை அதி தீவிரமாக வருகிறது. தமிழகத்தில் ஆர

Advertisement

இந்தியா முழுவதும் கொரோனா  பரவலின் இரண்டாவது அலை அதி தீவிரமாக வருகிறது. தமிழகத்தில் ஆரம்பத்தில் வேகமாக பரவிய கொரோனா தொற்று கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில் நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மீண்டும் தீவிரமாக பரவ துவங்கியுள்ளது. 

கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருவதால் தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. இந்தநிலையில், தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்க வாய்ப்புள்ளதாக கொரோனா தடுப்பு சிறப்பு மேற்பாா்வை அலுவலர் தெரிவித்துள்ளாா்.

கொரோனா தடுப்பு சிறப்பு மேற்பாா்வை அலுவலர்  சித்திக் நேற்று சென்னை பல்லவன் சாலையில் உள்ள 24 மணி நேரமும் செயல்படும் கொரோனா பரிசோதனை செய்யும் மையத்தை ஆய்வு செய்தார். அப்போது அவர் பேசுகையில், சென்னையில் புதிய கொரோனா பரிசோதனை மையங்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை நெருங்க வாய்ப்புள்ளது. இதன்காரணமாக இது போன்ற கூடுதல் பரிசோதனை நிலையங்களை ஏற்படுத்தப்படுகின்றன என தெரிவித்தார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#corona #tamilnadu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story