புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 36 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு எவ்வளவு?
corona increased in pudukkottai
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தீவிர தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,275 உயர்ந்து உள்ளது.
தமிழகத்தில் சென்னையில் தான் கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா அதிகம் பரவும் மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை போன்ற மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மக்கள் பிற மாவட்டங்களுக்கு சென்றதால் பல மாவட்டங்களில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
ஆரம்பத்தில் கொரோனாவே பாதிக்காத மாவட்டமாக இருந்த புதுக்கோட்டையில் தற்போது கொரோனா அதிகமாக பரவ தொடங்கியுள்ளது. புதுக்கோட்டையில் நேற்று ஒருநாள் மட்டும் 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சைக்காக ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 167 ஆக அதிகரித்துள்ளது. 117 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 48 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் பலியாகி உள்ளார். கொரோனா பாதித்த ஒருவர் தற்கொலை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362