×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மக்களே உஷார்.! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உடனே புகார் அளியுங்கள்.! போக்குவரத்து அதிகாரிகள் அதிரடி.!

தீபாவளி பண்டிகையையடுத்து ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11.11.20 முதல் 18.11.20 வரை இயக்கப்பட உள்ள ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் வழக்கத்திற்கு புறம்பாக அதிக கட்டணம் வசூல் செய்வது மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தமிழக அரசின் கட்டணமில்லா தொலைபேசி சேவை 1800 425 6151 மூலம் பயணிகள் புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.

வருகிற நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து வெளியூர்களில் தங்கி இருப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால் பல மாவட்டங்களில் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் பேருந்துகளில் (ஆம்னி பஸ்களில்) கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க சேலம் மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்த குழுவினர் பேருந்து நிலையங்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் சோதனை நடத்த உள்ளனர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்கள் பல்வேறு இடங்களில் நின்று கொண்டு பேருந்துகளில் ஏறி சோதனை செய்வார்கள் என்றும், அப்போது பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது கண்டறியப்பட்டாலோ, அளவுக்கு மீறி அதிக பயணிகளை ஏற்றிச்சென்றாலோ கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Omni bus #bus ticket
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story