×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

12ஆம் வகுப்பு தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை என தாளாளர் மீது புகார்.! வீதிக்கு வந்து போராடும் பள்ளி மாணவிகள்.!

12ஆம் வகுப்பு தனியார் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை என தாளாளர் மீது புகார்.! வீதிக்கு வந்து போராடும் பள்ளி மாணவிகள்.!

Advertisement

 பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளரை கண்டித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் தற்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருநின்றவூரில் செயல்பட்டு வரும் ஏஞ்சல் மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பள்ளியின் தாளாளர் வினோத் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் இது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறையினர் போராடி வரும் மாணவ மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. 
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Sexual Harassment #school correspondent #protest #Students
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story