×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யாரவது காப்பாத்துங்க..! கதறிய மாணவர்கள்.! நண்பர்கள் கண்முன்னே கடலில் மூழ்கிய இன்ஜினீயரிங் மாணவர்..!

College student dead at mamalapuram beach

Advertisement

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்ற இடத்தில் என்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஒருவர் கடலில் மூழ்கி உயிர் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 10 பேர் மாமல்லபுரத்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அணைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்துவிட்டு கோயிலுக்கு தெற்கு பக்கம் உள்ள கடலில் மாணவர்கள் அனைவரும் குளித்துள்ளனர்.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக வந்த ராட்சத அலையில் சிக்கி தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த சைலேஷ்வரராவ் (20) என்ற மாணவர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் நண்பனை காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளனர். இதற்கு இடையே சைலேஷ்வரராவ் கடலின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார்.

இதனை அடுத்து அப்பகுதியில் இருந்த மீனவர்கள் மாணவரை தேடி கடலுக்குள் சென்றுள்ளனர். ஆனால், அவர்களால் மாணவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் 3 மணி நேரம் கழித்து மாணவனின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் சக மாணவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dead #college student
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story