×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலுக்கு எதிர்ப்பு: காதலியை கைவிட முடியாமல் கல்லூரி மாணவன் தவிப்பு!.. இறுதியில் நிகழ்ந்த சோகம்..!

காதலுக்கு எதிர்ப்பு: காதலியை கைவிட முடியாமல் கல்லூரி மாணவன் தவிப்பு!.. இறுதியில் நிகழ்ந்த சோகம்..!

Advertisement

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகேயுள்ள சின்னக்கோடியூர் கிராமம், கே.கே.சி நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் ஒரு கூலித்தொழிலாளி. இவரது மகன் ரீகன் (18). இவர் திருப்பத்தூர் நகர்புறத்தில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான கல்லூரி ஒன்றில் இளங்கலை 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

இதற்கிடையே, ரீகன் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த ரீகனின் பெற்றோர் அவரை கண்டித்ததுடன், அந்த பெண்ணுடன் பழகுவதை கைவிடுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதன் காரணமாக, மன உளைச்சல் அடைந்த ரீகன் காதலியை கைவிட முடியாமல் தவித்துள்ளார் .

இந்த நிலையில், சம்பவத்தன்று தனிமையில் இருந்த ரீகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்றிருந்த அவரது பெற்றோர் வீடு திரும்பிய போது, ரீகன் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து ரீகனின் தந்தை சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Jolarpet #Tirupathur District #Commits Suicide #college student #Suicide By Hanging
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story