சென்னையில் ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா! திருச்சியில் ஜெப்ரா பர்வீன்! அதிர்ச்சி தரும் கல்லூரி மாணவிகள் தற்கொலை!
college girl suicide
சென்னையில் ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் திருச்சியில் ஜார்க்கண்ட் மாநில மாணவி ஜெப்ராவின் தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி கே.சாத்தனூர் பகுதியில் உள்ள அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநில மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியைச் சேர்ந்த மாணவி ஜெப்ரா பர்வீன், கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி முதலாம் ஆண்டு அறிவியல் பாடப் பிரிவில் படித்துவந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று காலை அவர் தங்கியிருந்த அறையில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகம் அளித்த தகவலின்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவியின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட மாணவி பள்ளிக்கல்வி வரை இந்தியில் படித்ததாகவும். தற்போது கல்லூரிப் பாடங்கள் ஆங்கில வழியில் நடத்துவதால், அவர் பாடங்களைப் புரிந்துகொள்ள முடியாமல் சிரமப்பட்டார் எனவும் அதன்காரணமாகவே தற்கொலை செய்துகொண்டதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால், ஹாஸ்டல் வார்டன் அவருக்கு தொல்லை அளித்ததால், மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்று திடுக்கிடும் தகவல்கள் கல்லூரி மாணவர்களிடையே பரவி வருகிறது. கல்லூரி வளாகத்துக்குள் மாணவிகள் செல்போன் பயன்படுத்தக் கூடாது. ஆனாலும், விடுதியில் தங்கியிருக்கும் மாணவிகள் செல்போனை மறைத்து வைத்துப் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதேபோல் மாணவி ஜெப்ரா பர்வீனும் செல்போன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவி ஜெப்ராவை தனது அறைக்கு அழைத்த காப்பாளர், மிக மோசமாகத் திட்டியதுடன், சகமாணவிகளின் முன்னிலையில் அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி ஜெப்ரா, அவருடன் அறையில் தங்கியிருக்கும் தோழிகளில் ஒருவரிடம் சொல்லி அழுதுள்ளார். இந்த நிலையில், அடுத்தநாள் காலை 6.30 மணியளவில் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362